Header

Showing posts with label சென்னையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு எப்படி? சர்வே முடிவு!. Show all posts
Showing posts with label சென்னையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு எப்படி? சர்வே முடிவு!. Show all posts

சென்னையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு எப்படி? சர்வே முடிவு!

சென்னையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு எப்படி? சர்வே முடிவு!

ஆன்லைன் வழியாக பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் விஸ்டம்ஜாப்ஸ்.காம் சென்னையில் வரவிருக்கும் 6 மாதங்களில் நிறுவனங்களின் துறை ரீதியிலான பணிக்கு ஆட்சேர்ப்பு போகுகள் குறித்த சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், எஃப்எம்சிஜி, உற்பத்தி மற்றும் பொறியியல், ரீடெய்ல், தொலைதொடர்புத்துறை, உடல்நல பராமரிப்பு மற்றும் மருந்துத் தயாரிப்பு மற்றும் இ-காமர்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் சென்னையில் ஏறக்குறைய 84 நிறுவனங்களை உள்ளடக்கியதாக இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய மழைவெள்ளத்திற்கு பிறகு இம்மாநகரில் உள்ள நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாக விஸ்டம்ஜாப்ஸ்.காம் மேற்கொண்ட ஆய்வு கண்டறிந்திருக்கிறது. சென்னையில் கடந்த ஆண்டு காணப்பட்ட நிலைகள் இந்த ஆண்டில் நிகழும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எட்டது என்றபோதிலும்கூட, பெரும்பாலான முக்கிய துறைகளில் வேலைவாய்ப்புகளை தேடுகின்ற நபர்களுக்கு வரவிருக்கும் மாதங்கள் சிறப்பானதாகவே இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் பணிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, தகவல் தொழில்நுட்பத்துறை, ஆட்டோமோட்டிவ் மற்றும் உற்பத்தித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்களில் எப்போதுமே நம்பிக்கை தருவதாகவும், ஏறுமுகமாகவுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே கால அளவோடு ஒப்பிடுகையில், பிற முக்கிய துறைகளில் பணிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை எவ்வித மாற்றமின்றி அதே அளவுகளில் இருக்கும் அல்லது ஓரளவு சரிவை சந்திக்கக்கூடும் என்று விஸ்டம்ஜாப்ஸ்.காம்-ன் நிறுவனர் அஜய் கோல்லா தெரிவித்துள்ளார்.