Header

கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி?

கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி?


வருமான வரி கூடுதலாகச் செலுத்தப்படும் நிகழ்வுகள் பல்வேறு சமயங்களில் ஏற்பட்டு விடுகின்றன. பணியாளர்கள் அலுவலகம் மூலம் வருமான வரி கணக்கிட்டுச் செலுத்தும்போது சில நேரங்களில் அரசால் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்போது நிகழ்கிறது. வர்த்தகர்கள் அரசால் நிர்ணயிக்கப்படும் வரியைக் கட்டியபின்பு அவர்களின் வியாபாரங்கள் மூலம் மேலும் கூடுதலாக வருமான வரி செலுத்தவேண்டி நிகழ்கிறது. இன்னும் இது போன்ற நிகழ்வுகளின்போது அதற்குரிய படிவங்களில் வருமான வரித்துறைக்கு ஆடிட்டர்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ உரிய முறையில் விண்ணப்பித்து ஆவணங்கள் சமர்ப்பிக்கும்போது அவர்கள் கூடுதலாகச் செலுத்திய வருமான வரித் தொகை செலுத்தியவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றித் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

* கூடுதல் தொகையைத் திரும்பப்பெறலாம் சில நேரங்களில் தனிநபர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கூடுதலாக வருமான வரி செலுத்திவிடும் சந்தர்ப்பங்களில் அவர்கள் அதிகமாகச் செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பப் பெற உரிமையுடையவராகிறார்கள். அரசு தனிநபர்கள் தங்களின் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும்போது கூடுதல் தொகையைத் திரும்பப்பெற அனுமதிக்கிறது.

* வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் தனிநபர்கள் திரும்பப் பெறுவதில் உள்ள முழு நடைமுறைகளையும் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான இறுதி நாள் ஜூலை 31, 2017 நெருங்கிக் கொண்டிருக்கிறது.

* சரியாக வரி தாக்கல் செய்துள்ளோமா என்று எப்படிச் சரிபார்ப்பது வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களைப் பூர்த்திச் செய்த பிறகு "Calculate Tax" பொத்தானை கிளிக் செய்யவும். நீங்கள் வழங்கிய தகவல்களிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய வரியை உங்கள் கம்ப்யூட்டர் கணித்துவிடும். கூடுதல் வரியை திரும்பப் பெற நீங்கள் தகுதியானவராக இருந்தால் அது ‘Refund' வரிசையில் தோன்றும். அடுத்தபடியாக நீங்கள் வருமான வரிக் கணக்கினை e-file முறையில் தாக்கல் செய்ய வேண்டும்

* வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு என்ன ஆகும்? உங்கள் கணக்கினை தாக்கல் செய்து சரிபார்க்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அவற்றைக் கவனமாகப் பரிசீலிக்கும். அதனைத் தொடர்ந்து பிரிவு 143(1) ன் படி நடவடிக்கை குறித்துத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் தகவல் கீழ்குறிப்பிட்டவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம்

* கணக்கு ஒத்துப்போதல் உங்கள் வரி கணக்கீடு வரித்துறையினரின் கணக்கோடு ஒத்துப் போனால் நீங்கள் மேற்கொண்டு வரி செலுத்த வேண்டியதில்லை, அவ்வாறு ஒத்துப்போகா விட்டால் நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியதிருக்கும். அல்லது உங்களின் திரும்பப் பெறும் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் அல்லது பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படலாம். உங்கள் கணக்கீடு வரித்துறையினரின் கணக்கீட்டுடன் ஒத்துப்போனால் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுத் திருப்பப்படும் தொகை குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

* தகவல் எப்படி அளிக்கப்படும் ஆன்லைன் மூலம் இவ்வாறு செய்யும்போது உங்களுக்கான தகவல் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும்.

* நிலைகள் குறித்துச் சர்பார்ப்பது எப்படி? இந்த நடைமுறைகளின் அவ்வப்போதைய நிலைகள் குறித்து வருமான வரித்துறையின் இணையதளத்தில் e-filing தளத்தில், ‘My Account' தலைப்பின் கீழ் ‘Refund / Demand Status' தலைப்பைச் சொடுக்கினால் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://tin.nsdl.com என்ற இணையதளத்திற்கும் செல்லலாம். உங்கள் PAN எண்ணையும் கணக்கு ஆண்டையும் பதிந்த உடன் உங்கள் நிலையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளமுடியும். திருப்பப்படும் தொகை உங்கள் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் அல்லது காசோலையாக வழங்கப்படும்.

* பணத்தைத் திரும்பப்பெற சரியாகச் செய்ய வேண்டியவை இதற்காக நீங்கள் கீழ்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சரியான வங்கி தகவல்கள், IFSC எண், வங்கி கணக்கு எண், MICR எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். நிரந்தரக் கணக்கு எண் PAN எண்ணை உள்ளிடும்போது தவறேதும் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

* அஞ்சல் முகவரி உங்களின் அஞ்சல் முகவரி சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுக்கான அறிவிக்கைகள், பிற தகவல்கள் அனைத்தும் உங்கள் முகவரிக்கு அஞ்சல் மூலமே அனுப்பப்படும். ஏற்படும் ஒரு சிறு தவறு கூட உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர்வதில் காலதாமதத்தை ஏற்படுத்திவிடும் அல்லது உங்களுக்குக் கிடைக்காமலே கூடப் போய்விடக்கூடும்.

* டிடிஎஸ் உங்கள் வருமான வரிக் கணக்கில் பணம் உங்கள் அலுவலகத்தாலோ, பிற வர்த்தகர்களாலோ டிடிஎஸ் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டாலோ சரியான டான் எண் குறிப்பிடப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும். படிவம் 16 ல் குறிப்பிடப்படும் தகவல்களும் படிவம் 26 AS ல் குறிப்பிடப்படும் தகவல்களும் ஒத்திருக்க வேண்டும். பிரிவு 80 C கீழ் மேற்கொள்ளப்படும் பிடித்தங்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும், அப்போதுதான் உங்களுக்கான தொகை சரியாகத் திரும்பி வரும்.

* முன்கூடியே வரி செலுத்துவதால் கிடைக்கும் நன்மை நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கினை முன்கூடியே தாக்கல் செய்வதன் மூலம் உங்களுக்குத் திரும்பத் தொகை வருவதில் காலதாமதம் தவிர்க்கப்படுவதோடு உரிய வட்டித் தொகையை நீங்கள் இழக்காமலிருக்க முடியும்.

* சிரமங்களைத் தவிர்ப்பது எப்படி? சரியான நேரத்தில் கணக்கு தாக்கல் செய்தல், சரியான தகவல்களை உள்ளீடு செய்தல் ஆகியவை தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்து உங்களின் தொடர்ந்த வாழ்க்கையில் நிம்மதியைத் தரக்கூடியவையாக இருக்கும் எனும்போது நல்ல விஷயம்தானே.

பிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி

பிட்காயினைத் தாண்டி 11  ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி




 11 க்ரிப்டோகரன்ஸிக்களைப் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்
Bitcoin Alternatives: 11 Cryptocurrencies You Should Know

பிட்காயினைத் தாண்டி 11  ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி

பிட்காயினை விட்டு தள்ளுங்க.. இதுல முதலீடு செய்தாலும் லாபம் அதிகம்

பிட்காயினைத் தாண்டி பெருமளவில் கவனம் ஈர்த்து, பிரபலமாக இருக்கக்கூடிய 11 க்ரிப்டோகரன்ஸிக்களைப் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். இன்டெர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலோனார் பிட்காயின் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள் என்ற அனுமானம் பரவலாக இருப்பினும், அதே போன்ற சிறப்புகளைப் பெற்றிருக்கும், ஏன், சில சமயம் அதைக் காட்டிலும் புதுமையான அம்சங்கள் நிறைந்தவையாக இருக்கும் இதர பல க்ரிப்டோகரன்ஸிக்களும் உள்ளன. பிட்காயின் தவிர்த்து, ஆயிரக்கணக்கான க்ரிப்டோகரன்ஸிக்கள் உள்ளன. இவை ஆல்ட்காயின்கள் (ஆல்டர்னேட் காயின்கள்) என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படுகின்றன. க்ரிப்டோகரன்ஸிக்களைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் இருப்பினும், பிட்காயினின் புகழ் வெளிச்சம் இந்த ஆல்ட்காயின்களை அதிக எண்ணிக்கையில் வளர்ச்சியடையச் செய்திருப்பினும், மிகச் சில ஆல்ட்காயின்கள் மட்டுமே விரிவான ஆய்வுக்குரிய தகுதியோடு காணப்படுகின்றன. அதிகபட்ச மதிப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவு புகழ் ஆகிய அம்சங்கள் பொருந்திய 11 பிட்காயின்களை மட்டும் தேர்வு செய்து இங்கே தொகுத்திருக்கிறோம்.

11.இஸட்கேஷ் ஜிரோகாயின் ப்ராஜெக்டினால் தொடங்கப்பட்ட இஸட்கேஷ் என்னும் க்ரிப்டோகரன்ஸி கடந்த 12 மாதங்களில் சுமார் 140 மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒரு காயின் சுமார் 337 டாலர் என்ற மதிப்பில், ஏறத்தாழ 2.71 மில்லியன் காயின்கள் புழக்கத்தில் உள்ளதன் அடிப்படையில், இஸட்கேஷின் தற்போதைய மொத்த கேபிடலைசேஷன் சுமார் 915.20 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடங்கப்பட்ட போது காயின் ஒன்றுக்கு சுமார் 1000 டாலர் என்ற அளவில் மக்கள் பணம் செலுத்தியுள்ளனர். பிட்காயினுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இஸட்கேஷ், அதனைக் காட்டிலும் அதிகமான அநாமதேய தன்மை உடையது. அதனால், பிட்காயினைப் போலன்றி, இவை எவ்வித சுவடும் இன்றி, உலகம் முழுக்கப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

10. இஓஎஸ் பிட்காயினின் ஆல்டர்நேட்டிவ்கள் பட்டியலில் அடுத்து வருவது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 11 க்ரிப்டோகரன்ஸிக்களுள் ஒன்று இஓஎஸ் ஆகும். இஓஎஸ் அதன் இனிஷியல் காயின் ஆஃபரிங்கை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தி, சுமார் 185 மில்லியன் டாலரை ஈட்டியது. இதன் மூலம் வருவாய் அடிப்படையிலான 7 பெரிய ஐஸிஓக்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இஓஎஸ் தற்சமயம் சுமார் 1.39 பில்லியன் டாலர்களைத் தன் மொத்த கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது. இஓஎஸ் -ஐ உருவாக்கிய பிளாக் ஒன், பல்வேறு ப்ராசஸ்களை ஆட்டோமேட் செய்வதற்கும், அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கும், டீசென்ட்ரலைஸ்ட் அப்ளிகேஷன்களுக்கான மல்ட்டி-டைரக்ஷனல் ஸ்கேலிங்கை வழங்குவதற்கும் உபயோகிக்கப்பட்டு வரும் ஈதெரியம் போன்றதொரு பிளாக்செயினை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இஓஎஸ், ஐஸிஓவிற்கு முன், ரீயுடர்ஸ் போன்ற முன்னணி வர்த்தக நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நியூயார்க் டைம்ஸ் அதைப் பற்றி எழுதும் நிலையை எட்டியது. இத்தகைய மிகையான பிரபல்யம், ஐஸிஓவிற்குப் பின், இஓஎஸ்ஸின் விலையை 5 டாலருக்கு மேல் உயர்த்தியது. என்றாலும் தற்சமயம் இதன் விலை 2.50 டாலர் மார்க்கைச் சுற்றியே உள்ளது.

9. க்யூடம் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமான க்யூடம் ஃபவுண்டேஷன், க்யூடம் க்ரிப்டோகரன்ஸியை பிட்காயின் மற்றும் ஈத்தெரியம் பிளாக்செயின்களின் ஒருங்கிணைந்த வடிவமாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. சப்ளை செயின் நிர்வாகம் மற்றும் டிரான்ஸாக்ஷன்களை ஆட்டோமேட் செய்யும் பிசினஸ்கள் உபயோகிக்கக்கூடிய ஸ்மார்ட் காண்ட்ராக்டுகளுக்கான பிளாட்ஃபார்மாகத் திகழ்கிறது க்யூடம். பல்வேறு முன்னணி நிறுவனங்களும் க்யூடமிற்கு ஆதரவளித்து, ஃபைனான்ஷியல் சப்போர்ட் மட்டுமின்றித் தத்தம் நெட்வொர்க்குகளையும் வழங்கி, க்யூடமிற்கான தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த உதவி வருகின்றன. க்யூடமின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 1.08 பில்லியன் டாலர்களாகும்.

8.நெம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு க்ரிப்டோகரன்ஸி, நெம் (என்இஎம்) ஆகும். 2015 ஆம் ஆண்டு லான் செய்யப்பட்ட இது ஜாவா என்ற கணினி மொழியில் இயற்றப்பட்டுள்ளது. பியர்-டூ-பியர் க்ரிப்டோகரன்ஸி மற்றும் பிளாக்செயின் ப்ளாட்ஃபார்மான இது, ப்ரூஃப்-ஆஃப்-இம்பார்டன்ஸ் அல்காரிதம் (பெரும்பாலான க்ரிப்டோகரன்ஸிக்கள் ப்ரூ-ஆஃப்-வொர்க் தொழில்நுட்பத்தையே உபயோகித்து வருகின்றன), மல்ட்டிஸிக்னேச்சர் அக்கவுண்ட்கள், என்க்ரிப்டட் மெஸேஜிங் மற்றும் எய்கன் டிரஸ்ட் அல்காரிதம் அடிப்படையிலான ரெப்யூடேஷன் சிஸ்டம் போன்ற புதிய அம்சங்களைப் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்சமயம் டோக்கன் ஒன்றுக்கு 0.22 டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ள நெம், தன் மொத்த மார்க்கெட் கேபிட்டலைஸேஷனாகச் சுமார் 1.97 பில்லியன் டாலரைக் கொண்டுள்ளது.

7. ஐஓடிஏ ஐஓடிஏ, இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸுக்கான சாதனங்களுக்கு இடையில் பாதுகாப்பான கம்யூனிகேஷன் மற்றும் பேமெண்டுகளை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டதொரு க்ரிப்டோகரன்ஸி ஆகும். ஐஓடிஏவின் பின்புலமாக விளங்கும் டிஸ்ட்ரிபியூட்டர்-லெட்ஜர் தொழில்நுட்பம், பிளாக்செயினுக்குப் பதிலாக, டைரக்டட் ஏஸைக்ளிக் கிராஃபை உபயோகப்படுத்துகிறது. இதன் பலனாக, ஃப்ரீ டிரான்ஸாக்ஷன்கள், அதிவேக கன்ஃபர்மேஷன் டைம்ஸ் மற்றும் ஒரே நேரத்தில் அளவற்ற டிரான்ஸாக்ஷன்கள் போன்றவை சாத்தியமாகியுள்ளன. ஐஓடிஏவின் மொத்த மார்க்கெட் கேப்பிடலைசேஷன் சுமார் 2.68 பில்லியன் ஆகும்.

6. என்இஓ என்இஓ, மிகப்பெரிய பிட்காயின் ஆல்டர்நேட்டிவாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் சுமார் 2.55 டாலர் பில்லியன் மதிப்பிலான அதன் மார்க்கெட் கேபிடலைஸேஷன் தான். என்இஓ, சைனாவின் முதல் டீசென்ட்ரலைஸ் செய்யப்பட்ட ஓப்பன்-சோர்ஸ் பிளாக்செயின் பிளாட்ஃபார்ம் மற்றும் க்ரிப்டோகரன்ஸி ஆகும். ஸ்மார்ட் காண்ட்ராக்ட்களைச் செயல்படுத்த அனுமதிப்பதில் ஈத்தெரியத்தை ஒத்திருந்தாலும், ஈத்தெரியம் வர்ச்சுவல் மெஷினுக்கான கோட் எழுதும் டெவலப்பர்களுக்கு ஸாலிடிட்டி என்ற ப்ரொக்ராமிங் லாங்வேஜ் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியத்துடன் கூடிய ஈத்தெரியத்துடன் ஒப்பிடுகையில், என்இஓ ஸ்மார்ட் காண்ட்ராக்ட் ப்ளாட்ஃபார்மானது, எந்த விதமான மெயின்ஸ்ட்ரீம் ப்ரொக்ராமிங் லாங்க்வேஜையும் அனுமதிக்கிறது என்பது அதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

5.மொனெரோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய க்ரிப்டோகரன்ஸிக்களில் அடுத்து வருவது சுமார் 2.56 பில்லியன் டாலர் மொத்த மதிப்புடன் கூடிய மொனெரோ ஆகும். 2014 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மொனெரோ, பிரைவஸிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. பிட்காயின் மற்றும் இதர க்ரிப்டோகரன்ஸிக்களைப் போல் ட்ரான்ஸாக்ஷன்களை ரெகார்ட் செய்வதற்கு, பப்ளிக் லெட்ஜரையே உபயோகப்படுத்தி வந்தாலும், இது அனுப்புநர், பெறுநர் மற்றும் ரிங் ஸிக்னேச்சர்கள், பொய் முகவரிகள் மற்றும் ரிங்க்ஸிடி தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றை இருட்டடிப்புச் செய்கின்றது. எனினும், பிரைவஸி ஆப்ஷனை டிஸேபிள் செய்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

4. டேஷ் டேஷ் (டிஜிட்டல் கேஷுக்கான போர்ட்மேன்ட்யூ) என்பது 2015 ஆம் ஆண்டு வரை டார்க்காயின் என்றும் அதற்கு முன்பு வரை எக்ஸ்காயின் என்றும் அழைக்கப்பட்டு வந்த க்ரிப்டோகரன்ஸியின் பெயர் ஆகும். 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இது, பிட்காயினைக் காட்டிலும் யூஸர்-ஃப்ரெண்ட்லியாக இருப்பதற்குப் பிரயத்தனப்பட்டு வருகிறது. மைனெர்களால் அப்ரூவ் செய்யப்பட வேண்டிய டிரான்ஸாக்ஷன்களை உடைய பாரம்பரியமான பிட்காயினின் அம்சங்களுடன், "மாஸ்டெர்நோட்ஸ்" மூலம் விரைவான மற்றும் தனிப்பட்ட டிரான்ஸாக்ஷன்களைச் செய்வதற்கு டேஷ் அனுமதிக்கிறது. தனது மொத்த கேபிடலைஸேஷனாகச் சுமார் 4.84 மில்லியன் டாலர்களை வைத்திருக்கும் டேஷ், சுமார் 7.71 மில்லியன் காயின்களைப் புழக்கத்தில் விட்டு, மொத்த சப்ளையில் 40% பங்கு வகிக்கிறது.

3.ரிப்பிள் அடுத்ததாக, க்ரிப்டோகரன்ஸிக்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எக்ஸஆர்பி என்றும் அழைக்கப்படும் ரிப்பிள் ஆகும். இதே பெயருடன், ரியல்-டைம் க்ராஸ் ஸெட்டில்மெண்ட், கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரெமிட்டன்ஸ் நெட்வொர்க் ஆகியவற்றின் நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸியாகத் திகழ்கிறது ரிப்பிள். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரிப்பிள், சுமார் 9.73 பில்லியன் டாலர்களைத் தன் மார்க்கெட் கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது. பப்ளிக் லெட்ஜர் மூலமாக ஷேர் செய்யப்படும் இது, பாதுகாப்பான, விரைவான மற்றும் ஏறக்குறைய முற்றிலும் இலவசமான குளோபல் ஃபைனான்ஷியல் டிரான்ஸாக்ஷன்களைச் செய்வதற்கும் அனுமதிக்கிறது. யுனிகிரெடிட், யூபிஎஸ் மற்றும் ஸான்டாண்டர் போன்ற முன்னணி வங்கிகள் பலவும், ரிப்பிளுக்கு ஆதரவு அளித்துள்ளன.

2. லைட்காயின் 2011 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சார்லி லீ என்பவரால் வெளியிடப்பட்ட லைட்காயின், பிட்காயின் கோர் கிளையன்ட்டின் வடிவாகத் திகழ்வதால், இது பிட்காயின் போன்றே இருந்தாலும், சுமார் 2.5 நிமிட குறைந்த அவகாசத்தையுடைய பிளாக் ஜெனரேஷன் டைமுடன், அதிக எண்ணிக்கையிலான காயின்களை (சுமார் 84 மில்லியன்) வழங்குகிறது. மேலும் பிட்காயினைப் போல் எஸ்ஹெச்ஏ-256 என்பதை ஹேஷ் அல்காரிதமாக உபயோகிக்காமல் ஸ்க்ரிப்ட்டை உபயோகித்து வருகிறது. தற்சமயம், லைட்காயினின் மொத்த கேபிடலைஸேஷன் சுமார் 4.84 பில்லியன் டாலர்களாகவும், சுமார் 54.02 மில்லியன் காயின்கள் புழக்கத்தில் உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

1.ஈத்தெரியம் பிட்காயின் அல்லாத, மிகவும் பிரபலமான க்ரிப்டோகரன்ஸி மற்றும் ப்ளாக்செயின் ப்ளாட்ஃபார்மாகத் திகழ்வது ஈத்தெரியம் ஆகும். ஈத்தெரியம் என்பது ஸ்மார்ட் காண்ட்ராக்ட் செயலியை ஈத்தெரியம் வர்ச்சுவல் மெஷின் மூலம் வழங்கி வரும் ஓர் பிளாட்ஃபார்ம் ஆகும். ஈத்தெர் எனப்படும் நேட்டிவ் கரன்ஸியுடன் கூடிய இப்பிளாட்ஃபார்ம், சுமார் 45.52 பில்லியன் டாலர்களைத் தன் மொத்த கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது. ஈத்தெருக்கான தொகைக்கு அளவேதும் இல்லை என்றாலும், வருடத்திற்கு 18 மில்லியன் டோக்கன்கள் மட்டுமே வெளியிட அனுமதி அளிக்கப்படுகிறது. ஈத்தெரியம், ஸ்மார்ட் காண்ட்ராக்ட்களை எளிதாக்க ஈத்தெரியம் பிளாட்ஃபார்மில் மென்பொருள் உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பெற்ற எண்டர்பிரைஸ் ஈத்தெரியம் அலையன்ஸில், ஜேபிமார்கன் சேஸ் & கோ., இன்க். (என்ஒய்எஸ்இ:ஜேபிஎம்), மைக்ரோஃப்ட் கார்ப்பரேஷன் (நாஸ்டாக்:எம்எஸ்எஃப்டி) மற்றும் இன்டெல் கார்ப்பரேஷன் (நாஸ்டாக்:ஐஎன்டிஸி) போன்ற ஜாம்பவான்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அவர்தம் ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆல்டர்நேட்டிவ்கள் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 11 க்ரிப்டோகரன்ஸிகளின் பட்டியல் முடிவை எட்டியுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பிட்காயின் ஆல்டர்நேட்டிவ்கள் மிகவும் புதியவை; அவற்றின் எதிர்காலம் பற்றி எவ்வித நிச்சயமுமில்லை. ஆனால், ஈத்தெரியம், லைட்காயின், மொனெரோ போன்ற சில தம்மை நிரூபித்திருப்பதோடு, இனிமேலும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கின்றன.

Bitcoin Alternatives: 11 Cryptocurrencies You Should Know

ஜிஎஸ்டி-ன் கீழ் நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பிக்க எளிய வழிகள்..!

ஜிஎஸ்டி-ன் கீழ் நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பிக்க எளிய வழிகள்..!

Strategies which companies may use to avoid paying taxes the gst india





சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள் முடிந்துள்ளன. ஆனால் புதிது புதிதாக நிறுவனங்கள் வரியைக் குறைக்கப் பல வழிமுறைகளைக் கையாண்டு கொண்டு தான் இருக்கின்றன. எனவே ஜிஎஸ்டி-ன் கீழ் வரியைக் குறைக்க மற்றும் தவிர்க்க நிறுவனங்கள் கையாளும் உத்திகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.

1.சிறியதாகச் செயல்படவும் வருமான வரித் துறை வல்லுநர்கள் நிறுவனத்தின் அளவு 50 கோடிகளுக்கு இருக்கின்றது என்றால் டிராக் செய்ய மிகவும் சிரமம் என்று கூறுகின்றனர். எனவே சிறியதாகச் செயல்பட்டு வருவாயினைத் தனிநபர் கணக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

2.சிறிய வரி நிறுவனங்களுடன் இணைப்பு பெரிய கணக்கியல் நிறுவனங்கள் அவர்களுடன் பணியை அளிக்கும் வாடிக்கையாளர்களின் நற்பெயரினை பார்க்கின்றன. எனவே, இந்த நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை நிர்வகிக்கச் சிறிய பட்டய கணக்காளர்களை வைத்து இருப்பார்கள்.

3.ரொக்கப் பணப் பரிவர்த்தனை பணப் பரிவர்த்தனை மூலம் வணிகம் செய்யும் போது பரிவர்த்தனையை டிராக் செய்ய ஆதாரங்கள் கிடைக்காமல் மறைக்கலாம், இதனால் வரியினைக் குறைக்க முடியும். இன்னும் ஜிஎஸ்டி முறைக்கு நிறுவனம் மாறாமல் இருக்கின்றது என்றால் அது வரை பணப் பரிவர்த்தனை செய்து வரியினைக் குறைக்கலாம்.

4.பில் மற்றும் பில் போடமல் நடக்கும் வணிகம் மருந்துக் கடைகள் போன்ற பல சிறிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பில் அளிக்காமல் பொருட்களை வழங்கி விட்டுப் பணப் பரிவத்தனை செய்துவிடுகின்றனர். பில் வேண்டும் என்று கேட்கும் போது மட்டுமே இவர்கள் ரசீதுகளை அளிக்கின்றனர். இதனால் வருவாயினை எளிதாக மறைக்க முடியும்

5.முன் தேதியிட்ட பரிவர்த்தனைகள் வரி செலுத்தாமல் தவிர்க்க முக்கியமான வழி என்றால் அது முன் தேதியிட்ட பரிவர்த்தனைகள் முறையாகும். நடப்புத் தேதியில் வாங்கும் ஒரு பொருளுக்கு முந்தைய மாத தேதியில் ரசீது அளிப்பதன் மூலம் வரியைத் தவிர்க்கலாம். பணத்தை வங்கியில் டெப்பாசிட் செய்யாதது வரை இப்படிச் செய்து வரி ஏய்ப்புச் செய்ய முடியும்.

6.பொருட்களின் வகையினை மாற்றுதல் தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் வகையினை மாற்றி அமைப்பதன் மூலமாக வரியினைக் குறைக்க முடியும். 80,000 பொருட்கள் மீதான வரி விகிதம் ஜிஎஸ்டி-ன் கீழ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, அது அவை பயன்படுத்தும் தயார்ப்புப் பொருட்களைப் பொறுத்தது ஆகும். சாக்லேட்டினை இனிப்பு, கொக்கோ நிரப்பப்பட்ட மிட்டாய், சாக்லேட், பிஸ்கட் அல்லது செதில்-பூசப்பட்ட பிஸ்கட் வகையாக மாற்றி அமைக்கலாம்.

7.வரி விலக்கு வரம்பு 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு உண்டு. எனவே பெரிய நிறுவனங்களைச் சிறு நிறுவனங்களாகப் பிரித்துச் செயல்படலாம். இதனால் வரி விலக்கும் பெற முடியும்.

8.வரி விலக்குப் பொருட்கள் வணிகத்தைச் செய்தல் பூஜை பொருட்கள், காதி, விவசாய உபகரணங்கள், மண் பாத்திரங்கள் மற்றும் உள்ளூர் கைவினை போன்ற பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. குறிப்பாகத் தென் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பூஜைக்குத் தேவையான பொருட்களினை மதம் சார்ந்த தயாரிப்புகள் வகையாகப் பதிவு செய்தார்கள் என்றால் அவற்றுக்கு வரி விலக்கு பெற முடியும்.

9.பதிவு இருப்பிடத்தை மாற்றுக வட கிழக்கு மாநிலங்களுக்கு வரி விலக்கு அதிகம் உண்டு. எனவே நிறுவனத்தினை அங்குப் பதிவு செய்து வணிகச் செய்வதன் மூலம் வரிகளைக் குறைக்க முடியும்.

10.இன்டர்-ஸ்டேட் இயக்கம் நிறுவனங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோறு மாநிலத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்ல இந்த உத்தியைக் கையாளுகின்றன. ஒரு மாநிலத்தில் விற்பனையாளர், நல்ல கோரிக்கைகளுடன் உள்ளீட்டுக் கடனைப் பெறுகையில், பிற மாநிலங்களில் விற்பனை செய்யும் பொது அதனை மறைத்து விற்க முடியும்.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் என்றால் என்ன?


வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம் 

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



பிட்காயின் குறித்த உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

பிட்காயின் என்று வார்த்தை அன்மை காலங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இதில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருக்கும்.

பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி முதலீடுகளை அரசு ஆதரிக்கவில்லை என்றாலும் பலரும் அதில் முதலீடு செய்து வருவதை நாம் அன்றாடும் கேட்டு வருகின்றோம். எனவே பிட்காயின் குறித்த உங்களுக்கு உள்ள கேள்விகளுக்கான பதிலை இங்குப் பார்க்கலாம்.

பிட்காயின் என்றால் என்ன?
இது நாணயம் அல்ல, ஆனால் விரிச்சுவல் நாணம் எனப்படும். கிரிப்டோ கரன்சிகளில் மிகவும் பிரபலமானது பிட்காயின் ஆகும். இதனை வைத்து பரிவர்த்தனையும் செய்ய முடியும், இந்த நெட்வொர்க் மிகவும் பாதுகாப்பு வசதியுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பிட் காயின் எங்குக் கிடைக்கும்?
இந்தியாவில் 11 தளங்கள் பிட்காயினை முதலீட்டைப் பெற்று நிர்வகிக்கின்றன. அவை யூனோகாயின், ஸெப்பே, காயின்மாமா, லொக்கல் பைட்கின்ஸ், பிட்காயின் ஏடிஎம்கள் ஆகும்.

அதிக விலையா?
உலகளவில் பிட்காயினின் மதிப்பு பல மடங்கு உஅர்ந்து 11,000 டாலரை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பில் 1 பிட்காயின் 8.6 லட்சம் ரூபாயாகும்.

பிட்காயினைப் பணக்காரர்களுக்கான நாணயமா?
இல்லை பிட்காயினை நீங்கள் 1,000 ரூபாய்க்கும் வாஙலாம். எப்படி 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என இந்திய நாணயங்கள் உள்ளதோ அதேப்போன்று பிட்காயினும் குறைந்த மதிப்பில் கிடைக்கிறது.

இந்தியாவில் பிட்காயினை எங்கு எல்லாம பயன்படுத்த முடியும்?
தற்போது வரை பிட்காயினைப் பரிய அளவில் பயன்படுத்த கடைகள் இல்லை. ஆனால் இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் மற்றும் மேக் மை டிரிப் நிறுவனங்கள் பிட்காயினைப் பரிவர்த்தனைக்காக ஏற்கின்றனர்.

இந்தியாவில் தற்போது வரை எவ்வளவு பிட்காயின் வாங்கப்பட்டுள்ளது?
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 200 முதல் 250 கோஇ வரை பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர்.

பிட்காயின் போன்று வேறு கிரிப்டோ கரன்சிகள் உள்ளனவா?
Ethereum, Litecoin, Dash மற்றும் Rippl போன்றவையும் பிட்காயின் பொன்ற பிரபல கிரிப்டோ கரன்சிகள் ஆகும். விலையில் மாற்றங்கள் உண்டு.

உலகளவில் எவ்வளவு பேர் பிட்காயினைப் பயன்படுத்துகிறார்கள்?
உலகம் முழுவதும் பிட்காயினில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் முதலீடு செய்துள்ளார்கள்.

எந்த அளவில் பிட்காயினிக்கு மதிப்பு உள்ளது?
2013-ம் ஆண்டுப் பிகாயினில் முதலீடு செய்த ஒருவர் டெஸ்லா எஸ் மாடல் காரை 92 பிட்காயின் கொடுத்து வாங்கியுள்ளார் என்றால் பாருங்கள். டெஸ்லா எஸ் மாடல் கார் ஒன்று 1,00,000 டாலர் விலை ஆகும்.

CIBIL - சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

CIBIL - சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் ஸ்கோர் பற்றிய இந்த அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்! #CIBIL




கடன் சம்பந்தப்பட்ட  விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?

CIBIL என்றால் என்ன?

Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் ( சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை ) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.

யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?

க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.

இதனால் என்ன பயன்?

நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.

கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?

ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.

என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?

க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.

ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்?

சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும்.

சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?

சிபில் இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.

தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?

சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.

சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?

க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.

கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?

ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.

சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?

இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.

ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.

அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.

நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?

குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.

எந்த வயது, எதில், எவ்வளவு முதலீடு செய்யலாம்

Technical Analysis Training - Share Market Training

Technical Analysis Training  - Share Market Training

 Click Here  & Register To One to One Training
Free Share Market Training : 
Join Our Whatsapp No : 9841986753


Stock Market Training for beginners,
Technical Analysis on Equity,Commodity,Forex Market,
Learn Indian Equity Share Market Share Market Trading Basics

: Fundamentals Of Share Market Trading training,
 Stock Market Basics -
Share Market Trading Basics,
Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)

Click Here  & Register To Get 2 days Trial Tips
Free Share Market Training : 
Join Our Whatsapp No : 9841986753

உங்கள் முதலீட்டுக்கான போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன?

உங்கள் முதலீட்டுக்கான போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன?
How many mutual fund schemes should you have investment


முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள்? - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்..  
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
Share Market Training

முதலீடுகளைச் செய்யும் போது பல முதலீட்டாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் சில நேரங்களில் முதலீடு செய்கின்றனர். திடீர் என்று ஏதேனும் சிக்கல் என்றால் பல திட்டங்களில் முதலீடு செய்வது பல சிக்கலை ஏற்படுத்தும். சில ஃபண்டுகளை விற்கலாமா? எத்தனை திட்டங்களில் முதலீடு செய்யலாம்?
இதுபோன்ற முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தும் சில முக்கியக் கேள்வி பதில்களை இங்கே காணலாம்?


இரண்டு நல்லது, 6 அதிகம்
சராசரியாக முதலீட்டாளர்களுக்கு ஒன்று அல்லது மூன்று மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் தான் அவரது இலக்கை அடைவதற்கானதாக இருக்கும். வரிச் சேமிப்புத் திட்டம், மல்டிகேப் திட்டம், டெபெட் திட்டம் என முதலீடு செய்வது தான் சரியான முடிவு ஆகும். இதுவே அதிக முதலீடு வைத்துள்ளவர்கள் அதிகபட்சம் 6 திட்டங்கள் வரை முதலீடு

பல திட்டங்களில் முதலீடு செய்வது வாழ்க்கையைக் கடினமாக்கும்
பல மியூச்சுவல் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது என்பது டிராக் செய்யவும் கடினமாக இருக்கும். உங்களுக்கு முதலீடுகளைக் கவனிக்க அதிக நேரம் இருக்கின்றது என்றால் சரி இல்லை என்றால் 4 முதல் 6 முதலீடுகளுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். சரியான முடிவுகளை எடுக்கவும் பல திட்டங்களில் முதலீடு செய்யும் போது சிரமமாக இருக்கும்.

பல திட்டங்கள் = அதிகப் பன்முகத்தன்மை
ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்கள் என்பதே பன்முகத்தன்மை ஆகும். பல திட்டங்களில் பிரித்து முதலீடு செய்துள்ளபோது நீங்கள் ஒரு திட்டத்தினைக் கூட முழுமையாக நம்பவில்லை என்று அர்த்தமாகவும். பல வகையாகப் பிரித்து முதலீடு செய்வது என்பது உங்கள் லாபத்தினையும் பாதிக்கும்

அதிகப் பன்முகத்தன்மை = டூப்ளிகேஷன்
பன்முகத்தன்மையான போர்ட்போலியோ என்பது சரியான முதலீட்டு முறை அல்ல. உதாரணத்திற்கு 6 டசன் திட்டங்களை வங்கினால் சில திட்டங்களின் போர்ட்போலியோ ஒன்றாகவே இருக்க வாய்ப்பு உண்டு. இது தேவை இல்லாத டூப்ளிகேஷன் மற்றும் வருவாயில் சமரசத்தினை ஏற்படுத்தும்.

Free Share Market Training in Chennai

Free Share Market Training in Chennai 


Click Below Link


 Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753
  Free Commodity Tips : Join our Whatsapp No : 9094047040

முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள்? - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்..

முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள்? - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. 

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

Share Market Training

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

Share Market Training



* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள்? - உங்களுக்காக ஒரு  
   வழிகாட்டல்..

* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் 
   இருந்து பணம் சம்பாதியுங்கள்

* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!

* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?

*********************************************************************************

இலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்
பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள்  - சென்னை
இலவச முதலீட்டு ஆலோசனைகள்


ருபீடெஸ்க் கன்சல்டன்சி


*********************************************************************************
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்

1.  பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

2.  உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்

3. பகுதி பகுதியாக முதலீடு செயவும்

4. ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்

5. வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு          
    நம்முடையதாகஇருக்கவேண்டும்

6. லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும்

எஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி?

எஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி?
how to start investment Systematic Investment Plan(SIP) through online




Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
Share Market Training



எஸ்ஐபி என்பது முறைப்படுத்தப்பட்ட நிலையான முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதும் ஒன்று. மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் குறைந்தது 5000 ரூபாய் முதலீசு செய்ய வேண்டும் என்பதால் முதலீடுகள் குறைவாகவே இருந்தது. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகக் குறைந்தது 500 ரூபாய் முதல் மாத மாதம் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக எஸ்ஐபி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. எனவே இந்த எஸ்ஐபி திட்டங்களில் எப்படிக் கணக்கை துவங்குவது மற்றும் முதலீடு செய்வது என்பது பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் ஒரு புகைப்படத்தைச் சமர்ப்பியுங்கள். மேலும், நீங்கள் உயிருடன் இருப்பதை நேரடி பரிசோதனை அல்லது (ஐபிவி) ஈ கேஒய்சி எனப்படும் மின்னணு முறை வழியாக நிதி இல்லத்திற்கு உறுதி செய்யுங்கள்.

இ-கேஒய்சி க்கான நிதி இல்லங்கள் அல்லது பதிவாளர்கள் ஒருவேளை உங்கள் நிதி நிறுவனம் ஈ கேஒய்சி வசதிக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், காம்ஸ் கேஆர்ஏ அல்லது கார்வி இணையத்தளத்திற்குள் உள்நுழைந்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை கணக்கை உருவாக்குங்கள் ஒருமுறை உங்கள் கேஒய்சி இணக்கமான பிறகு, பரஸ்பர நிதி நிறுவனத்தின் இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள். ஒரு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கணக்கை உருவாக்க புதிய கணக்குகளுக்கான பதிவு இணைப்பைத் தேடுங்கள்

திட்டத்தின் பெயர், சிப் மற்றும் தேதியை சரிபாருங்கள் உங்கள் கணக்கிற்குள் உள்நுழைந்து, பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள், பிறகு ஒரு சிப் தேதியை தேர்வு செய்து உங்கள் வேண்டுகோளைச் சமர்ப்பியுங்கள்.

வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் சிப் திட்டத்தைத் தற்போது தொடங்கிவிட்டீர்கள். இப்போது, சந்தை நிலைமைகளைப் பற்றிக் கவலைப்படாமல், நீண்டகாலத்திற்கான செல்வத்தை உருவாக்கத் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.